தனியார் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நாகர்கோவில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டியானது நாகர்கோவில் அறிஞர் அண்ணா மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர்.
கிருஷ்ணரேகா 30-45 வயதினருக்கான 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசான 10,000 ரூபாய் பண பரிசு மற்றும் கோப்பையை பெற்றார். இதனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அவர்கள் ஸ்டாலின் வெற்றி பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக