ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச் சங்க செயற்குழு கூட்டம்!
வேலூர்,ஜன.17 -
வேலூர் மாவட்டம் தொரப்பாடி சிறை வளாகத்தில் வேலூர் மாவட்ட ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர் நலச் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அ. உபையதுல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.பழனி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர். கிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நெல்வாய் என்.நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ. ராஜேந்திரன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. மோகன் கலந்துகொண்டு தீர்மானத்தை இனிதே நிறைவேற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எ.வி. ராஜேந்திரன் நன்றி கூறினார். இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக