குறிஞ்சிப்பாடி அருகே திருவெண்ணெய்நல்லூர் கிராமத்தின் வழியாக செல்லும் சாலையை சரி செய்ய கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 7 நவம்பர், 2023

குறிஞ்சிப்பாடி அருகே திருவெண்ணெய்நல்லூர் கிராமத்தின் வழியாக செல்லும் சாலையை சரி செய்ய கோரிக்கை.

.com/img/a/

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் கல்குணம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் திருவெண்ணெய்நல்லூர் கிராமம் இருந்து வருகிறது.


இது பரவனாற்றின் மறுபக்கம் உள்ளது. தனித்து உள்ள இந்த கிராமத்திற்கு செல்லும் ஆறு கிலோ மீட்டர் சாலை பழுதடைந்துள்ளது. மேலும் மழைக் காலங்களில் சாலையைக் கடப்பதெ ன்பது இயலாத நிலையில் உள்ளது. அவசரகால வாகனங்கள் செல்ல முடியாத சூழலும் இருந்து வருகிறது.. எனவே இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாகசரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad