தூத்துக்குடி - பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 மனுக்களுக்கு விசாரணை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 8 நவம்பர், 2023

தூத்துக்குடி - பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 மனுக்களுக்கு விசாரணை.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.


அதன்படி புதன் கிழமையான இன்று (08.11.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 3 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 25 மனுதாரர்கள் என மொத்தம் 28 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.


பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad