நெமிலி அடுத்த பள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 30 செப்டம்பர், 2023

நெமிலி அடுத்த பள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்.

.com/img/a/

பள்ளூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பிரதாப் அவர்கள் தலைமையில், *"கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்"* நடைபெற்றது!. இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமினை தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.


மேலும் இத்திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவது குறித்தும், பொதுமக்கள் இந்த முகாமில் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார், இந்த சிறப்பு மருத்துவ முகாமில், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்.இரதி அவர்கள் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரை ஆற்றினார்.


இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேரு மருத்துவம், கர்பப்பை, வாய் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் கண் மருத்துவம், கோவிட்-19 சித்த மருத்துவம், தொழு நோய், காச நோய், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவம் அளிக்கப்பட்டது.


இம்முகாமில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பிரபாகரன், ஊராட்சி மன்றத் துணை தலைவர்  அம்சா மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், பூஞ்செழியன், தேவநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதர செவிலியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad