திருச்செந்தூர் பிரதான சாலையில் திடிரென தீப்பிடித்து எரிந்த கார்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

திருச்செந்தூர் பிரதான சாலையில் திடிரென தீப்பிடித்து எரிந்த கார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார்(44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் தேங்காய் பழக்கடை வைத்துள்ளார்.


இவர் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே சாலையோரத்தில் அவரது காரை நேற்று இரவு நிறுத்தி விட்டு ஓட்டலில் டிபன் வாங்க சென்றுள்ளார். திடீரென இந்த காரின் முன்பக்கத்தில் இருந்து புகை கிளம்பி கார் தீ பிடிக்க தொடங்கியது. 


இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் வேகமாக விரைந்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கார் பேட்டரியில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்ததாக தெரியவந்தது. மேலும் காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பிரதான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையேயும் அப்பகுதி மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.


- தமிழக குரல் செய்திகளுக்காக. சுந்தரராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/