பாணாவரம் காவல் நிலையத்திற்கு
ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு சிறப்பான முறையில் செயல்பட்டதற்காக சர்வதேச தரச் சான்றிதழ் ( ISO) வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை கண்டறிதல் மற்றும்
விசாரணை செய்தல், அமைதியை நிலை நாட்டுதல், அவசர நிலைகளுக்கு பதிலளித்தல், பல சேவைகளை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தை சுகாதாரமாக பேணுதல், போன்றவற்றிற்காக ISO தர சான்றிதழ் வழங்கப்பட்டு
வருகிறது.
அந்த வகையில் பாணாவரம் காவல் நிலையம் மற்றும் கானல் ஆளிநர்கள்,
பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாகவும், காத்திருக்க உகந்ததாகவும் கட்டிடத்தின்
உட்புற வேலைகள் செய்யப்பட்டுள்ளன. புகார் பெட்டிகள் வைத்து அதில் பொதுமக்கள் சார்பில் போடப்படும் புகார்கள் மீது துரிதமாக நடனடிக்கை எடுத்தல், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் உரையாடுதல், காவல் நிலையத்தை சுகாதாரமாக நிர்வகித்தல், வழக்கு சம்மந்தமான ஆவணங்களை முறையாக பேணுதல், பதிவு செய்பப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தல், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை பொருட்கள் மற்றும் சாலைவிபத்துகள்
குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை
கடைபிடித்து சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு
வரும் மதிப்பு மிக்க சர்வதேச தர கட்டுப்பாட்டு சான்றிதழ் (ISO)
வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக