ராணிப்பேட்டை மாவட்ட விசிக கட்சியின் புதிய மேற்கு மாவட்ட செயலாளர் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை மாவட்ட விசிக கட்சியின் புதிய மேற்கு மாவட்ட செயலாளர் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக வசதிக்காக மேற்கு, கிழக்கு   இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் மேலும் கட்சி வளர்ச்சிப் பணியை அடிப்படையாகக் கொண்டு  தற்போது ராணிப்பேட்டை மத்திய மாவட்டம், கிழக்கு  மாவட்டம், மேற்கு மாவட்டம் என   புதிய மாவட்டங்களை பிரித்து கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


அந்த வகையில் மத்திய மாவட்ட செயலாளராக ரமேஷ் கருர்ணா, என்பவருக்கும் மேற்கு மாவட்ட செயலாளராக பிரபு என்கிற பிரபாகரன் என்பவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட  மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு என்கிற பிரபாகரன் ஆற்காட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் மாவட்டத்திலுள்ள பொறுப்பாளர்கள் புதிய மாவட்ட செயலாளருக்கு ஆலுயர மாலை  மற்றும் சால்வை அணிவித்து மேலத்தளை வாத்தியங்களுடன்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள பொறுப்பாளர்களை சந்திப்பதற்கு புதிய மாவட்ட செயலாளர் பிரபு என்கிற பிரபாகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மாவட்டச் செயலாளர் வருகைக்கு காத்திருந்த பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் பேசுகையில் மாவட்டச் செயலாளராக அறிவித்த விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கும், பரிந்துரை செய்த பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


மேலும் அவர் பேசுகையில் உயிருள்ளவரை தலைவருக்கும் கட்சியின் வளர்ச்சி பணிக்கும் உண்மை தொண்டனாக இருந்து செயல்படுவேன் என்றும் மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளை முகாம்களை கட்டமைத்து பலப்படுத்துவதுதே என்னுடைய முதல் குறிக்கோள் என்றார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/