தாராபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இனைந்து மாநில விவசாய அணி பொருப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சிவக்குமாரை போனில் தொடர்புகொண்ட தொப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் என்பவரும் அவரது நண்பர்களும் சிவக்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலக சொல்லியும் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து தனது இனத்திற்கே துரோகம் செய்துவிட்டதாகவும் கூறியதோடு தொடர்ந்து அக்கட்சியில் இருந்தால் ரோட்டில் நடமாட முடியாது என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிவக்குமார் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், மாவட்ட பொருப்பாளர் சிறுத்தை முருகவேல், தன்டீஸ்வரன், ரகு, மற்றும் அருன்சாரதி, வீராச்சாமி, அம்பேத்பித்தன், செந்தில்குமார், விடுதலை நாச்சி ஆகியோர் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக