ஒன்றிய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதியில் சிறப்பு தொழுகை!
ராணிப்பேட்டை, ஏப் 04
ராணிப்பேட்டை மாவட்டம் ஒன்றிய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பெரிய மசூதியில் இன்று வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது தொழுகை வந்த இஸ்லாமியர்கள் வலது கையில் கருப்பு பேட்ச் அணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்பொழுது பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இந்த மசோதாவை எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து தொழுகையில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக