கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மவாட்டம், கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை வளாகத்தில் இன்று(10.04.2025), நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழவில் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது:-
இந்த பகுதியின் மக்களுக்கு பல நாளாக இருந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 348.950 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 327.579 கி.மீ, மாவட்ட இதர சாலை 1540.340 கி.மீ என ஆக மொத்தம் 2216.869 கி.மீ நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. நிர்வாக காரணங்களுக்காகவும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தூத்துக்குடி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் இருந்து புதிதாக கோவில்பட்டி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டம் தோற்றுவிக்கப்படுமென சட்டமன்றப் பேரவையில் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. 

அந்த அரசாணையின் அடிப்படையில், தூத்துக்குடி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலை 228.880 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 89.835 கி.மீ, மாவட்ட இதர சாலை 773.228 கி.மீ என ஆக மொத்தம் 1091.943 கி.மீ நீள சாலைகள் பிரிக்கப்பட்டு 01-04-2025 அன்று கோவில்பட்டி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டம் தோற்றுவிக்கப்பட்டது. 

இக்கோட்டக் கட்டுப்பாட்டின் கீழ் கோவில்பட்டி நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம், விளாத்திகுளம் நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம், ஒட்டப்பிடாரம் நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எட்டயபுரம் நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம் ஆகிய நான்கு உட்கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டமானது கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் மற்றும் சங்கரன்கோவில் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் அதிகம் உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு ஏதுவாக இரண்டு கோட்டங்களாக பிரிப்பதற்கு மக்கள் கோரிக்கைகள் வைத்துக்கொண்டிருந்த நிலையில், நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களும் நமக்காக இதனை செய்துகொடுத்துள்ளார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா,இ.ஆ.ப., கண்காணிப்புப் பொறியாளர் (நெ) க(ம)ப திருநெல்வேலி த.ஜெயராணி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோட்டப்பெறியாளர் (நெ) க(ம)ப தூத்துக்குடி ஊ.ஆறுமுகநயினார், கோட்டப்பெறியாளர் (நெ) க(ம)ப கோவில்பட்டி செ.ஜெகன்மோகன், உதவி கோட்டப்பொறியாளர்கள் ரெத்தினபாபு, ப.ராஜபாண்டி, விஜய சுரேஷ்குமார், உதவி பொறியாளர்கள் எபனேசர், சார்லஸ் பிரேம்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad