திருப்பத்தூர் , ஏப் 03 -
திருப்பத்தூரில் மாவட்டம் பத்திரிக்கை நிருபரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யவும் பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையா ளர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.
அப்போது எருது விடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபரை ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது அக்கம் பக்கத்தி னர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.அப்போது அதனை படம் பிடிக்க சென்ற தனியார் தொலைக் காட்சியில் நிருபராக பணிப்புரியும் பிரவின் என்பவரை பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரின் மகன் மதன் உள்ளிட்ட சில நபர்கள் நிருபரை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நிருபர் பிரவீன் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் குரிசிலாப்பட்டு காவல் நிலைய போலீசார் மதன் மற்றும் செய்தியாளர் ப்ரவின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் காவல் துறையினர் செய்தியாளரை தாக்கிய மதன் உள்ளிட்ட சில நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், மேலும் நிருபர் பிரவீன் மீது பொய் வழக்கு பதிவு செய்த மாவட்ட காவல்துறை மற்றும் குருசிலம்பட்டு போலீசாரை கண்டித்து
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பத்திரிக்கையா ளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக