கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் - மாவட்ட ஆட்சியர் தலைமையில் முகாம்...!
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் மேட்டுப்பாளையம் வட்டத்தில் முகாமிட்டு திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்...
மேலும், மாவட்ட அளவில் அலுவலர்கள் இந்த வட்டத்துக்கு உள்பட்ட அரசு திட்டப் பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாயவிலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக