கடலில் மீன் பிடிக்கும்போது எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையில் சிக்கும் ஆமைகளை மீட்டு மீண்டும் கடலில் விட்டு தன்னார்வ பணிகளை மேற்கொண்டமைக்காக தருவைக்குளம், வீரபாண்டியபட்டிணம், மணப்பாடு மற்றும் குலசேகரபட்டிணம் பகுதியைச் சேர்ந்த 
தலா ஒரு மீனவருக்கு தலா 5000 ரூபாய் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக