திருச்செந்தூர்.......சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ. 3.09 கோடி உண்டியல் காணிக்கை......1390கிராம் தங்கம், 23,500 வெள்ளியும் கிடைத்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் தக்கார் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் தங்கம், நாகவேல் ,அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில் நாயகி ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி ,மோகன், கருப்பன், சுப்பிரமணியன், மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் ரூபாய் 3 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் காணிக்கைகளாக கிடைத்தன. மேலும் 1390 கிராம் தங்கம், 23 500 கிராம் வெள்ளி, 63,500 கிராம் பித்தளை,8700கிராம்செம்பு, 6 200 கிராம் தகரம் மற்றும் 752 அயல் நாட்டு நோட்டுகள் கிடைத்தன.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக