தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றிடவும் கல்வி நிதியான ரூ.2152 கோடியினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிடவும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றிடவும் கல்வி நிதியான ரூ.2152 கோடியினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிடவும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை!


வேலூர் , மார்ச் 29 -

வேலூர் மாவட்டம் கல்வி நிதியான ரூ.2152 கோடியினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட கோரிக்கை 
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பறிற்சி கருத்தரங்கம் மற்றும் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப் அன்னையா வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ், ஆர்.எஸ்.அஜீஸ்குமார், எம்.சினேகலதா, வாரா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் ச.மயில், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பொ.அன்பழன்கன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொருளாளர் ச.கார்த்திகேயன்,  அமைபுச் செயலாளர் முத்தையா,துணைத்தலைவர் பி ஜெயப்ரகாஷ்  கல்வி மாவட்ட தலைவர் திருக்குமரன் தமிழ்நாடு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் க.குணசேகரன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்ராஜன், ஆ.செல்வம் வட்டார செயலாளர் தினேஷ் எ.விஜயலட்சுமி இ.அனிதா, எ.சுமதி உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கே.ரகுராமன், கே.சங்கர், வி.எம்.ராஜா டி.கிருஷ்ணன் பி.அஜய்கோஷ், உள்ளிட்டோர்  பேசினர். 

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 
1. வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஈட்டிய விடுப்பு சரண் செய்யப்படும் நடைமுறை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் ஆசிரியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும் திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பறிக்கும் அரசாணை எண் 243 ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கை 2020ஐ உடனடியாக திரும்பப்பபெற வேண்டும், தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியான ரூ.2152 கோடியினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை தேசம் முழுவதும் ஒன்றிய அரசு நடைமுறை படுத்திட கோரி அகில இந்திய செயற்குழு கூட்டம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என அகில இந்திய துணைத்தலைவர் ச.மயில்,  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளை தமிழக அரசு மூட கூடாது கிராமப்புற மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் இதனால் கல்வியும் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் எனவே தமிழகத்தில் பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் இல்லையென்றால் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்    என அகில இந்திய துணைத்தலைவர்  ச.மயில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad