உளுந்தூர்பேட்டை ஒலையனூரில் இயங்கி வரும் சோர்டியா ஜெயின் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூரில் இயங்கி வரும் சோர்டியா ஜெயன் மேல்நிலை பள்ளியில் 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் சேனக்ராஜ் மற்றும் தாளாளர்கள் கோகுல், பிரதீபா, ஆஷா, சேனக்ராஜ் அவர்களின் பேரன் அஜய் விவின், மற்றும் பள்ளியின் முதல்வர் வினோலியா ராஜகுமாரி ஆகியோர் முன்னிலையில் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினை பிரதீபா தலைமை ஏற்றி நடத்தி வைத்தார், இவ்விழாவில் UKG மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், திரையிசை நடனம் ,சிலம்பம், பரிசளிப்பு விழா மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடைபெற்றது, இந் நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் வாகன ஓட்டுனர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக