குடியாத்தம் , ஜன 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை மற்றும் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகில் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமை தாங்கினார் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவைக்க வைத்தார் இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சாமி கண்ணு
கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தண்டபாணி பேராசிரியர்கள் மணிகண்டன் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் ஹெல்மெட் விழிப்புணர் பேரணி புதிய பஸ் நிலையத்தில் துவங்கி முக்கிய வீதிகளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக