""முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, அவர்கள் தலைமையில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் 49 அரசு நிதி உதவி
பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்திட
மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை
ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் (சத்துணவு) வேதமுத்து. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக