நாசரேத் அருகே வெட்டுப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

நாசரேத் அருகே வெட்டுப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தூத்துக்குடி மாவட்டம்   நாசரேத் அருகிலுள்ள கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜீவானந்தம் (65). இவருக்கு எபநேசர் என்ற மனைவியும், டேவிட் அழகுரத்தினம் (37), ஐசக் என்ற 2 மகன்களும் உள்ளனர். பிரான்சிஸ் ஜீவானந்தம் சொந்தமாக லாரி வைத்து குடிநீர் விநியோகம்  செய்யும் தொழில் செய்து வந்தார். டேவிட் அழகுரத்தினம் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில் கடந்த 22 ஆம்தேதி பிரான்சிஸ் ஜீவானந்தம் திடீரென்று மாரடைப்பால் இறந்தார். 3-வது நாளான 24.09.2023 அன்று அவரது வீட்டில் துக்க நிவர்த்தி கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும்  டேவிட் அழகுரத்தினம் தனது தாய் எபநேசரிடம் செலவுக்கு பணம் கேட்டதாக தெரிகிறது. 


இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாய்க்கு ஆதரவாக தம்பி ஐசக் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் அழகுரத்தினம் அரிவாளால் ஐசக்கின் காலில் வெட்டியுள்ளார். இதனை தடுக்கவந்த தாய் எபநேசருக்கு கழுத்துப் பகுதியில்  அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. படுகாயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து உறவினர் ஷீலா (57)  நாசரேத் போலீசில் புகார் செய்தார். துணை ஆய்வாளர் ராய்ஸ்ட்டன் விசாரணை நடத்தி டேவிட் அழகு ரத்தினத்தை கைது செய்தார். 


சிகிச்சை பெற்று வந்த தாய் எபநேசர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து நாசரேத் போலீசார் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/