மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் சிவரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷே ஒட்டி, இக்கோயில் முன்பாக யாக சாலையில் கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், கடஸ்தாபனம், கும்ப பூஜை ,லட்சுமி பூஜை, புண்ணிய வாசனம், மகா வேள்விகள், பூர்ணாகுதி, ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, குடங்கள்க புறப்பட்டு, கோவிலில் வலம் வந்து கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதை அடுத்து, அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கோயில் விழா குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சிவரக்கோட்டை பத்ரகாளியம்மன் ஆலய திருப்பணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, திருமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக