காச நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்க தனி அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

காச நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்க தனி அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு

காச நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்க தனி அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு 



ராணிப்பேட்டை மாவட்டத்தில்லுள்ள காசநோயாளிகள் மருந்துகள் வாங்க வேலூர் சென்று வாங்கும் நிலை இருந்து வந்தது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் S.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மருந்துகள் வாங்க தனி அறை ஏற்பாடு செய்துள்ளார்



தி நேஷ்னல்  அசோசியேஷன் சார்பில்  நன்றி தெரிவித்து  காசநோயாளிகளுக்கு சத்தான உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இரும்பு அலமாரிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் வழங்கினார்


 இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.கே.ஜெயஸ்ரீ. MBBS.,DTCD., மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் (காசநோய்)  கலந்து கொண்டு சிறப்பித்தார்  மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/