காரியாபட்டி கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

காரியாபட்டி கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வரலொட்டியில்  கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம், வரலொட்டியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், விரிவாக கலந்து ஆலோசித்து தேவையான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.


இக்கூட்டத்தில், பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர், முன்னதாக, அப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை, ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/