புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஐயனார் ஊரணி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. செவலூரில் உள்ள ஐயனார் ஊரணியை தூர்வார வேண்டுமென ஊராட்சித் தலைவர் திவ்யா முத்துக்குமாரிடன் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்களின் கோரிக்கையேற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா முத்துக்குமார் தலைமையில் துணைத்தலைவர் சங்கர் முன்னிலையில் ஐயனார் ஊரணி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக