பந்தலூர் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு: பொதுமக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு டேன்டீ ரேஞ்ச் எண்.2 திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் நடராஜ். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. தொடர்ந்து மாலை ஒரு ஆடு மட்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து நடராஜ் ஆட்டை தேடி சென்ற போது ஆட்டை சிறுத்தை அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும் இரவில் திருவள்ளுவர் நகர், படச்சேரி, சிங்கோனா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி சிறுத்தை நடமாடியுள்ளது.
மேலும் தேயிலை தோட்ட பகுதியிலும் சிறுத்தை உலா வந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். ஊருக்குள் புகுந்து ஆட்டை கொன்று விட்டு தொடர்ந்து நடமாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து
பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சேரம்பாடி வனச்சரகர் அய்யனார். வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டு விசாரணை நடத் தினர். மேலும் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிக் குள் சிறுத்தை பதுங்கி உள் ளதா என்று தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். இதை யடுத்து கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு
ஓம்காரம், உதவி வன பாது காவலர் கருப்புசாமி ஆகியோர் உத்தரவின் படி, திருவள்ளுவர் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின் றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து கால்நடைகள், வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகிறது. தேயிலை தோட்டங்களுக்குள்ளும் புகுந்துவிடுகிறது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால்
சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக