இது சம்பந்தமாக பெரியகுளம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டு மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், மூன்று மாத கால சிறை வாசத்திற்கு பின்பு வெளியே வந்த மாரிமுத்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பத் மகள் மகாலட்சுமி அடிக்கடி என்னை திருமணம் செய்து கொள் என்று மாரிமுத்து வீட்டிற்கே சென்று பலமுறை வற்புறுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக வேலவர் மற்றும் அவருடைய மனைவி மீண்டும் பெரியகுளம் காவல் நிலையத்தில் அமைதியாக இருக்கும் என் மகனை வேண்டுமென்று திருமணம் செய்து கொள் என்று அடிக்கடி மகாலட்சுமி கூறுவதாக புகார் செய்துள்ளார், இது சம்பந்தமாக இரு வீட்டாரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளதாக தகவல் தெரிகிறது. இந்நிலையில் இன்று காந்திநகர் கும்பக்கரை ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் புதிய சேலை மூலமாக இரண்டு பேரும் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளனர்.
இது சம்பந்தமாக அருகில் இருந்தவர்கள் பார்த்து தகவல் தந்ததின் பெயரில் பெரியகுளம் காவல்துறையினர் இறந்த இருவரது உடலையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இரு வேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட இந்த விபரீத காதலால் ஏற்பட்ட மரணம் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு வீட்டிற்கும் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக