வாகன தணிக்கை சோதனையின் போது பிடிப்பட்ட திருடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட 13 ஷேர் ஆட்டோக்கள் மீட்பு .
வேலூர் மாவட்டத்தில் அண்மையில் பல்வேறு இடங்களில் பயணிகள் ஆட்டோ தொடர்ந்து திருடப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்பு புகார் வந்துள்ளது. இந்நிலையில் சத்துவாச்சாரி காவல்துறையினர் வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது அது திருடப்பட்ட ஆட்டோ எனதெரியவந்து அதனை ஓட்டி வந்த மாதனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 38) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணையில் கோவிந்தராஜ் தொடர்ந்து பயணிகள் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டு வந்ததும் திருடப்பட்ட ஆட்டோக்களின்
நம்பர் பிளேட்டை மாற்றி அதை புதுப்பித்து வெளி மாவட்டங்களில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோவிந்தராஜிடமிருந்து 13 ஆட்டோக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக