நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீனரக(Hitech) தண்ணீர் பந்தல் திறப்பு விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!வ - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீனரக(Hitech) தண்ணீர் பந்தல் திறப்பு விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!வ

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீனரக(Hitech) தண்ணீர் பந்தல் திறப்பு விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஏப் 10 -

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தமிழகத்தில் தற்போது கோடை காலம் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது ஆகையால் வெப்பத்தில் இருந்து மக்கள் தாகம் தணிக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், நாள் ஒன்றுக்கு சுமார் 500 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யக்குடிய கருவியுடன் அமைந்துள்ள நவீனரக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமை வகித்தார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப் பாளர். பவானி வடிவேலு வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் கலந்து கொண்டு நவீனரக தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர் மற்றும் கூல் டிரிங்க்ஸ் உள்ளிட்ட பொருட் களை வழங்கினார். உடன் நிர்வாகிகள். புருஷோத்தமன்,முகமது அப்துல்ரகுமான்  அரிக்கிருஷ்ணன், அப்துல் நசீர். கருணா கரன், பழனி, கோகுல், மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad