நெமிலியில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பெ‌. வடிவேலு தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

நெமிலியில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பெ‌. வடிவேலு தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

நெமிலியில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பெ‌. வடிவேலு தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை , ஏப் 08 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாநில சுயாட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்துள்ளார் இதையடுத்து. நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந் தலைவருமான, பெ.வடிவேலு அவர்கள் மற்றும் பேரூர் செயலாளர் ஜி.ஜனார்த் தனன் ஆகியோர் தலைமையில், நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இதில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் N.K.சரவணன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad