ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ராமநாதபுரம் திரு உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா 04.04. 20 25 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.40 மணி வரையில் நடைபெறுவதால் அன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மற்றும் கல்வி பள்ளி கல்லூரி நிறுவனங்களுக்கும் (அரசு பொதுத்தேர்வு மற்றும் கல்லூரியில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை ஆகவும் அதனை ஈடு செய்யும் பொருட்டு 10.05.2025 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் என்பதனால் 04.04.2025அன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம். சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பு அவசர அலுவலகங்கள் கவனிக்கும் பொறுப்பு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன். செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக