பேரிடர் காலங்களில் விரைவாக சென்று மீட்பு பணி தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் செய்தி குறிப்பு!
அரக்கோணம் , ஏப் 18 -
ராணிப்பேட்டை மாவட்டம் தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில் பேரிடர் காலங்களில் விரைவாக சென்று மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி மேற்கொள்ளபட்டது .இந்த பயிற்சியில் மொத்தம் 12 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் 360 வீர்கள் பங்கேற்றனர் அரக்கோணத்தில் இருந்து வீரர்கள் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் திருவள்ளுவர்,ஆவடி ,பூந்தமல்லி ஆகிய பகுதிகள்.பேரிடர் மீட்புப் படையின் மண்டல மீட்புப் படை முகாம்கள்
தமிழகத்தில் திருநெல்வேலி,
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் இருந்து பாலக்காடு பகுதிக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்.போன்ற இடங்கள் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பேரிடர் மீட்புப் ஒத்திசைவு பயிற்சி மேற்கொண்டனர் இந்த பயிற்சியில் பேரிடர் ஏற்பட்ட பகுதிகளும் எவ்வாறு விரைந்து செல்வது அங்கு மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் ..புயல் மழை வெள்ளம் கட்டிட இடிபாடுகள்.. ரசாயனம் வேதியியல் உயிரியல் அனுகதிர்வீச்சு போன்ற இடர்பாடுகளை எவ்வாறு கையாள்வது குறித்த பயிற்சிகள் மற்றும் நவீன தொலை தொடர்பு சாதனங்கள் பயன்பாடுகள் குறித்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது .மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் படை பிரிவில் செயல்படும் ஒருங்கிணைந்த அவசர கட்டுப்பாடு மையம் மூலம் இந்த பயிற்சியை பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் கண்காணித்தனர் இந்த ஒத்திகை நிகழ்வை சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் அவர்கள் மேற்ப பார்வையில் படை பெற்றது
ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக