கோடை வெப்பத்தில்லிருந்து மீள நடைபாதையினர் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழம் காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில்!
காட்பாடி , ஏப் 26 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கமும், வேலூர் மனிதநேய மையமும் இணைந்து கோடை வெப்பத்தில் இருந்து மீள இன்று 26.04.2025 ஆசிரியர் இல்ல வளாகத்தில் நீர் மோர் தர்பூசணி பழம் மக்களுக்கு நடைபாதை வாசிகளுக்கு வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக் கிளையின் அவைத் தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
வேலூர் மனிதநேய மையத்தின் பொதுச் செயலாளர் துரை கருணாநிதி முன்னி லை வகித்தார்கள் இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி கிளை அவை துணைத் தலைவர்கள் குமரன் ஆர்.சீனிவாசன் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொரு ளார் வி.பழனி, மனிதநேய மையத்தின் பொருளாளர் ஜோசப் மற்றும் புவனேஸ் வரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித் தனர். தினமும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களும் குடிநீரும் தொடர்ந்து வழங்கு வதென தீர்மானித்துள்ளனர். வேலூரில் தொடர்ந்து 100 டிகிரிக்கும் மேலாக வெய் யில் இருப்பதாலும் மேலும் நேற்று 103 டிகிரியை தாண்டிய நிலையில் மக்கள் மிகவும் சிறப்பட்டு வருகிறன்றனர். இந்த கோடை வெப்பத்திலிருந்து மக்களை காப்பற்ற நீர் மோர், தர்பூசணி பழங்கள் வழங்கினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக