பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் தெப்போற்சவம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் தெப்போற்சவம்.

பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் தெப்போற்சவம். 

ஏரல் ஏப்ரல் 5, தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6 வது பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் துவங்கி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 

கடந்த மார்ச் 25 ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. 12 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு தெப்பம் நடந்தது. இன்று காலை 7.15 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம். 9.30 மணிக்கு நித்தியல். மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு சுவாமி மாயக்கூத்த பெருமாள் அலமேலு மங்கை
.குளந்தைவல்லி தாயார்களுடன் கருட மண்டபத்தில் எழுந்தருளினார் 

பின்னர் அலங்காரம் செய்து தோளுக்கினியானில் புறப்பட்டு 8 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி தீபாராதனை காட்டப்பட்டது. 12 சுற்று முடிந்து வீதி புறப்பாடு நடைபெற்றது. 

நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அரையர் சம்பத். சாரங்கன் ஸ்வாமிகள் அண்ணாவியார் பாலாஜி ஸ்வாமி ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம் உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

 இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தரம் பட்டர். பாலாஜி பட்டர். ஸ்தலத்தார்கள் சீனிவாசன். ராமானுஜம். ஸ்ரீதர். அறங்காவலர்கள் அஸ்வின்(எ) சோலைமலை. நாகராஜன். உலகம்மாள். சுப்பிரமணியன்.பொன் சுந்தர். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நம்பி.கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. வி..எஸ் சாரிட்டீஸ் திருக்கோயில் பிரிவு தலைமை அலுவலர் சுப்பு. பொறியாளர் கார்த்திக். கள மேற்பார்வையாளர் பரகாலசிங்கம். 

இன்று புஷ்ஞ்சாலி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை குளந்தைவல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் மற்றும் நிர்வாகம் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad