ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி, திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்திற்கு எதிராக, திடீரென பைப்லைன் உடைந்துள்ளதால், அதிலிருந்து குடிநீர் அதிக அழுத்தத்துடன் வெளியேறி, சாலையில் வீணாகி ஆறாக ஓடுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் இன்னும் சில நாட்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக