ஏப்ரல் 11 தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 7 வது திவ்யதேசம் தென்திருப்பேரை. ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 5.30 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல் கோஷ்டி. திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. காலை 6.00 மணிக்கு விஸ்வரூபம். 6.30 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல் கோஷ்டி. 7.00 மணிக்கு கொடிப்பட்டம் சுற்றி வந்தது. கொடிமரம் பூஜைக்கு பின்னர் 7.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
அர்ச்சகர் திருவேங்கடத்தான் கொடியேற்றினார். மாலை 4 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம். சாத்துமுறை. தீர்த்தம் சடாரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.00 மணிக்கு உற்சவர் சுவாமி நிகரில் முகில் வண்ணன் வாகன குறட்டிற்கு எழுந்தருளி பரங்கி நாற்காலி. சிம்ம வாகனம். அனுமார் வாகனம். சேஷ வாகனம். கருட வாகனம். யானை வாகனம்.இந்திர விமானம். குதிரை வாகனம். வெற்றி வேர் சப்பரம் ஆகியவற்றில் மாட வீதி.ரதவீதி உலா வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராகுல். செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி. ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் மகரபூஷணம் உறுப்பினர்கள் மாரி துரைசாமி. கணேசன். பாக்கியராஜ். வளர்மதி. ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 15 ந்தேதி கருட சேவை. ஏப்ரல் 19 ந்தேதி தேரோட்டம் ஏப்ரல் 20 ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக