சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் மூன்று பேரை சுட்டுப் பிடித்தனர். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையத்தில் பதுங்கி இருந்த மேலும் 5 பேரை கைது செய்தனர். அதேசமயம் இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஜீவகன் உள்பட 4 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பிரபல ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்தது. செல்லத்துரையை ஜான் மற்றும் அவரது தரப்பினர் படுகொலை செய்தனர். அதற்கு பழி வாங்குவதற்காக ஜாலியன் தம்பி ஜீவகன் தனது கூட்டாளிகளுடன் ஜானை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இந்நிலையில் ஜானின் மனைவி
சரண்யா செல்லத்துரையின் இரண்டு
மனைவிகளுக்கும் இந்த கொலையில்
தொடர்பு இருப்பதாகவும், கொலை
செலவுக்காக நகைகளை அடமானம்
வைத்து பணத்தை பெற்றதாகவும்
அவர் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில் செல்லத்துரையின்
இரண்டு மனைவிகளும் தொடர்ந்து
தலைமறைவாக உள்ளனர். அவர்களை
போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை
வழக்கில் சேலம், கிச்சிபாளையம்
கடம்பூர் முனியப்பன் கோவில்
தெருவை சேர்ந்த விக்கி (எ)
விக்னேஸ்வரன் (30) என்பவரை சுட்டுக்
கைது செய்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் குமார், பவானி தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக