நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் *தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் 13 ஆம் ஆண்டு துவக்க விழா, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா, சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா* ஆகிய முப்பெரும் விழா குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு *தளிர்விடும் பாரதத்தின் ஆலோசகர் முனைவர் அழ.லட்சுமணன்* தலைமை வகித்தார். *தளிர்விடும் பாரதத்தின் பொருளாளர் வரதராஜன்* அனைவரையும் வரவேற்று பேசினார்.
*ஊர் நாட்டாண்மைக்காரர் அருள், நகர மன்ற உறுப்பினர் இனியா ராஜு தமிழ் சிந்தனை பேரவையின் தலைவர் ரமேஷ் குமார்* ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமாரபாளையம் *நகர உதவி காவல் ஆய்வாளர் தங்க வடிவேல் J.K.K.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கேப்டன் டாக்டர்.நளினி மற்றும் அசோக் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர். நடராஜன்* ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சிறந்த சமூக சேவைக்காக குமாரபாளையம் *சித்ரா பாபு அவர்களுக்கு விடிவெள்ளி விருதும்,* பாசம் இல்லம் *குமார் அவர்களுக்கு பாசத்தலைவன் விருதும்,* ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் *கவியரசு அவர்களுக்கு உயிர் காக்கும் உத்தமர் விருதும்* வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு *பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கங்களும்* வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு *இலவச மரக்கன்றுகள்* வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை *தளிர்விடும் பாதத்தின் தலைவர் சீனிவாசன், உறுப்பினர்கள் சரண்யா பிரபு மற்றும் நிதர்சன்* ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் *தளிர்விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு* அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக