குடியாத்தம் சுதந்திர போராட்ட தியாகி அண்ணல் தங்கோ பிறந்தநாள் விழா!
குடியாத்தம் ,ஏப் 12-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுதந்திர போராட்ட தியாகியும் தமிழரசுருமான கு.மு.அண்ணல் தங்கோ பிறந்தநாள் விழா வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் சுதந்திர போராட்ட தியாகியும் தமிழறிஞ் ருமானஞ கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தம் நேரு பூங்காவில் உள்ள அண்ணாரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்தி கேயன் குடியாத்தம் சட்டமன்றஉறுப்பினர் வி.அமலு விஜயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர ராஜன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என் .இ .சத்யானந்தம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தமிழ்செம்மல் பானுமதி வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த .ஜே .ராஜபிரகாஷ் குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா மற்றும் அண்ணல் தங்கோ அவர்களின் குடும்பத்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக