கோடைகால வெப்பம் தணிக்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
நெமிலி, ஏப் 5 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் அரிகிலபாடி கூட்ரோட்டில், சேந்தமங்கலம், நெமிலி எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளர் சு.ரவி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு மோர்,இளநீர், தர்பூசணி, குளிர்பானம், பழ வகைகள் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் வினோத் அருகில் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிக் கண்ணன் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் முரளி விவசாய அணி ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஹரிஹரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக