கன்னியாகுமரி - 310 கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி - 310 கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது

310 கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் ஈச்சங்கோடு பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ஆடின் டேனியல் (21) என்பவர் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்த 310 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் போதை பாதையை தவிர்த்து வெற்றி பாதையில் பயணித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டு கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்.
தமிழன்  
T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad