குடியாத்தத்தில் டிராக்டர் இருசக்கர வாகனம் மோதி +2. மாணவன். சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
குடியாத்தம் , ஏப் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் சுங்கு சீதாராம் செட்டி தெரு பகுதியில் ஆம்பூரை சேர்ந்த கௌஷித் த/ பெ சிவகுமார் (வயது 18) என்பவர். இன்று காலை பலம்நேர் சாலையில் தனது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிர் பாராத. விதமாக எதிரே வந்தவந்த டிராக்டர் மீது மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்
தகவல் கிடைத்தவுடன் குடியாத்தம் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பத்மநாதன் வீராசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் உடல் கூறு ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர். ஓட்டுனரை வலை வீசி தேடி வருகிறார்கள் இதனால் குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக