விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்ரல் 19 சனிக்கிழமை விடுமுறை அளிக்க அரசுக்கு கோரிக்கை!
வேலூர் , ஏப் 12 -
வேலூர் மாவட்டம் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில்
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமானது +2 வகுப்பிற்கு கடந்த 04.04.25 முதல் தொடங்கி மதிப்பீட்டுப் பணிகள் விடைத் தாள் மதிப்பீட்டு முகாமில் நடைபெற்று வருகின்றன. வருகின்ற 19.04.25 சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஒரு நாள் விடுமுறை அளித் திட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாகவும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தேர்வுத் துறைக்கும் கோரிக்கையை வைக்கின்றோம்.இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத் தின் மாநிலப் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த் தனன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
கிறிஸ்தவர்களின் முக்கிய தினங்களாக ஏப்ரல் 17ஆம் தேதி பெரிய வியாழன், ஏப்ரல் 18 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 20 ஆம் தேதி ஈஸ்டர் டே என்ற அடிப்படையில் முக்கிய தினங்கள் கொண்டாடப்பட இருக்கின்றன.ஏப்ரல் 19 ஆம் தேதி ஹோலி சாட்டர்டே வர இருப்ப தால் அன்றைய தினத்தில் முகாமிற்கு விடுமுறை அளித்திடவும், கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டும் விடுமுறை அளித்திட கனிவுடன் கோரிக்கையை வைக்கின்றோம்.மேலும் வெள்ளி ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்கும், மற்றைய ஆசிரியர்களுக்கும் 19.04.25 சனிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிப்பதால் தொடர்ந்து செய்யும் பணிகளுக்கு சிறு ஓய்வாகவும், அடுத்து வருகின்ற நாட்க ளில் புத்துணர்ச்சியுடன் பணியாற்று வதற்கும் வழிவகுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வரும் ஏப்ரல் 19.04.25 சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு விடுமுறை அளித்திட கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் ஆகியோர்களுக்கும் உரிய நடவடிக்கைக்காக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு விடுமுறை அறிவிக்க வேண்டுகின்றோம்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக