முத்தநேந்தல் ஊராட்சி ஆர்.புதூர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தநேந்தல் ஊராட்சி ஆர்.புதூர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை. ராஜாமணி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, கிளைச் செயலாளர் மலைராஜ், கிளைச் செயலாளர் குமரேசன், காளிதாஸ், வாசு, அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக