நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்
நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷன் பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை உள்ள சாலை குறுகிய சாலை ஆகும். எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வண்ணம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சமீப நாட்களாக ஒருவழிப்பாதை என்பது இருவழி பாதையாக மாறி வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்தும் அவ்வப்போது நடைபெறுவதால் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் சுமித் அல்ட்ரின், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு உள்ள ரவுண்டானா பகுதியில் நின்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை விதிமுறைகளை மீறி ஒரு வழி பாதையை தவறாக பயன்படுத்தி வந்த வாகனங்கள், மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் அனைவருக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இனிமேல் இதுபோல் தவறு செய்யாதபடி இருக்க தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட கல்குளம் தாலுகா செய்தியாளர் அனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக