மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காவலர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள டி1 நகர் காவல் நிலையத்தில் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் காவலர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டு மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் காவல் நிலையத்தில் பணிபுரியும் துணை ஆய்வாளர், முதன்மை காவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். காவலர்கள் தங்கள் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் காவலர்களுக்கு உலக மகளிர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக