மருத்துவ கல்லூரி திறப்பு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு_க_ஸ்டாலின் M. K. Stalin அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதிகளை கொண்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை 06-04-2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, இறுதி கட்டப் பணிகளை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா_சுப்பிரமணியன் Ma Subramanian அவர்களுடன் இன்று (23.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமை கெராடா இளித்தொரை ராமச்சந்திரன், உதகை அரசு மருத்துவர் மற்றும் அரசு அதிகாரிகள் நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கே.எம்.ராஜு அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா இ.கா.ப., அவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் திரு.செல்வவிநாயகம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி , மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக