தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்புத் துறை சார்பில் துறைக் கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மொழிமொழிபெயர்ப்பு துறை நடத்தும் மொழிபெயர்ப்பில் பன்னாட்டு அடையாளங்கள் என்ற துறைக் கருத்தரங்கம் வெகு விமர்சையாக நடைபெற்றது
இக்கருத்தரங்கில்துணை வேந்தர்களான (பொறுப்பாளர்கள்) முனைவர் சி அமுதா ,மருத்துவர் முனைவர் பெ. பாரதஜோதி ஆகியோர் தலைமை தாங்கினார்.
பதிவாளர் கோ.பன்னீர்செல்வம், வளர் தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்.
தொடர்ந்து பொழிவாளர்கள் முனைவர் கு சிவக்குமார் மொழிபெயர்ப்பில் பண்பாட்டுச் சிக்கல்கள் என்ற தலைப்பிலும், முனைவர் லெ.ராஜேஷ், இயந்திர மொழிபெயர்ப்பும் பயன்பாடுகளும் என்ற தலைப்பிலும் மாணவ மாணவிகளுக்கு விரிவாக உரையாற்றி எடுத்துரைத்தார். . முன்னதாக மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா. சு.முருகன் வரவேற்றார். நிறைவில் கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ. வீரலெஷ்மி நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக