திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி ஊராட்சி துங்காவி கிராமத்தில் இன்று மட்டும் தெரு நாய் இரண்டு பேரை கடித்துவிட்டது இவர்கள் துங்காவி ஆரம்ப சுகாதார சுகாதார நிலையம் சென்று முதலுதவி செய்து வந்துள்ளார்கள்
நாங்கள் மடத்துக்குளம் மண்டல துணை கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் துங்காவி ஊராட்சி செயலாளர் அவர்களிடமும் தெரு நாய்களின் தொந்தரவு பகல் நேரங்களிலும்
இரவு நேரங்களிலும் அதிகமாக உள்ளது இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுங்கள் என்று பல கிராம சபை கூட்டங்களிலும் நேரிலும் வாய்மொழியாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்
இது நாள் வரையிலும் எந்த நடவடிக்கையும்
எடுக்காததால் இன்று மட்டும் இருவரை தெரு நாய் கடித்து விட்டது
இதை பார்த்தாவது
மடத்துக்குளம் மண்டல துணை கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் மற்றும் துங்காவி ஊராட்சி செயலாளர் அவர்கள்
தெரு நாய் சம்பந்தமாக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுப்பார்களா என்று எதிர்பார்த்து வரும் துங்காவி பொது மக்கள்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக