காட்பாடி , மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி அருகே உள்ள பெருமாள் குப்பத்தை சேர்ந்தவர் அரிதாஸ், தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மேல்சிகிச்சைக்காக உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரசவ வலியில் துடித்த சந்தியாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்க அழைத்து சென்றனர்.வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே அவருக்கு பிரசவவலி அதிகரித்தது. உடனே ஆம்புலன்சை டிரைவர் ஆசைத்தம்பி ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து சந்தியாவிற்கு மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி பிரசவம்பார்த்தார். ஆம்புலன்சில் வைத்தே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக