குடியாத்தம் சமூகவிரோதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட புளிய மரம் மயிரிழையில் உயிர் தப்பிய காவலர்!
குடியாத்தம் ,மார்ச் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் சாலை பாக்கம் துணை மின் நிலையம் எதிரில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த புளிய மரத்தில் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் தீ வைத்துள்ளார்கள்
மரம் உள்ளுக்குள்ளே தீ எரிந்து புகை மண்டலமாக இருந்தது இன்று காலை 7 மணி அளவில் அவ்வழியாக வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் பணி சம்பந்தமாக குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருக் கும் போது மரத்தைப் பார்த்து சம்பந்தப் பட்ட துறைக்கு தகவல் சொல்லிக் கொண் டிருந்தார் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் சென்றவுடன் மரம் திடீரென்று சாலையில் விழுந்தது இதனால் காவல்துறையைச் சேர்ந்தவர் மயிரிழலில் உயிர்த்தபினார் பிறகு சம்பந்தப்பட்ட துறையினர் சாலை யில் இருந்த புளிய மரத்தை அப்புறப் படுத்தினார்கள் இதனால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக